ஓசூர்: ஓசூர், மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில், தேசிய சட்ட சேவைகள் தினத்தை முன்னிட்டு, ஓசூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் மணி முன்னிலை வகித்தார். ஓசூர் சார்பு நீதிமன்ற நீதிபதி மோனிகா தலைமை வகித்து, அடிப்படை உரிமைகள், சட்டங்கள், சட்ட பாதுகாப்பு குறித்து விளக்கினார். மூத்த வக்கீல்கள் விஜயராகவன், சுந்தரமூர்த்தி, முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். வட்ட சட்டப்பணிகள் குழு, முதுநிலை நிர்வாக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE