திருநெல்வேலி: குற்றாலம் காப்பகத்தில் இருந்து 4 மாணவிகள் மாயமாகினர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் குற்றாலம் எழில் நகர் பகுதியில் லைப் கேர் மிஷன் என்ற ஒரு ஹோமில் தங்கி படித்துவந்த மரிய லிபியா, மணிமேகலை, எஸ்தர், அபிநயா ஆகிய மாணவிகள் அதிகாலை 4 மணி முதல் காணவில்லை. இதுகுறித்து அந்த நிர்வாகம் சார்பில் குற்றாலம் காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE