மரக்காணம் : கோட்டக்குப்பம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே நேற்றிரவு 8:00 மணியளவில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 70 வயது மதிக்கத்தக்க முதியவர் படுகாயமடைந்தார்.அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE