வேலூர்: வேலூர் மாவட்டத்தில், டெங்கு ஒழிப்பு பணியில் முறையாக ஈடுபடாத, தற்காலிக பணியாளர்கள், 50 பேரை பணிநீக்கம் செய்து, கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில், டெங்கு, வைரல் காய்ச்சல் வேகமாக பரவுகின்றன. மாவட்டத்தில், 1,400க்கு மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலில் பாதித்து சிகிச்சை பெற்றனர். கடந்த மாதம், 480 பேருக்கும், இந்த மாதம் இதுவரை, 143 பேருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இதுவரை, ஆறு பேர் மர்ம காய்ச்சலுக்கு இறந்தனர். இதையடுத்து, டெங்குவை கட்டுப்படுத்த, 910 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வீடு, வீடாகச்சென்று கொசு ஒழிப்பு பணிகள் செய்தனர். ஆனால், டெங்கு ஒழிப்பு பணிகளை சரியாக ?மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், 50 பேர் சரியாக, டெங்கு ஒழிப்பு பணி மேற்கொள்ளவில்லை என தெரிந்தது. அவர்களை பணிநீக்கம் செய்து, மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE