திருநெல்வேலி ; நெல்லை மாவட்டம் கேட்டை கருங்குளம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட கும்பிகுளம் டிரான்ஸ்பார்மில் இருந்து விவசாய பகுதிகளுக்கு மின்சாரம் செல்கிறது. இந்த டிரான்ஸ்பார்மர்க்கு மிக அருகிலேயே வயல் பகுதியில் உள்ள மின் ஒயர் அருந்து வயல்களில் கிடக்கிறது. இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது: புகார் தெரிவிக்க மின்சார அலுவலகத்தை தொடர்பு கொண்டால் யாரும் போனை எடுக்கவில்லை. எற்கனவே இந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள், மின் ஒயர்கள் மோசமாக பழுதாகி தாழ்ந்து கிடக்கிறது என்று பல முறை புகார் தெரிவித்தும், சரி செய்ய முயற்சி மேற்கொள்ளவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதன் அருகே தான் மின் ஒயர் அருந்து கிடந்ததில் வயலுக்கு டூவிலரில் வந்த இருவருக்கு காயம் எற்பட்டது. தற்போதும் மின் ஒயர் அருந்து விழுந்துள்ளது. ருக்கும் பாதிப்பு எற்படவில்லை. தற்போது விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளதால் உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழுதான மின் ஒயர்களை கண்டறிந்து மாற்றி தர வேண்டும் எனக்கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE