இந்த செய்தியை கேட்க
பிரேசிலியா: அடுத்த ஆண்டு (2020) குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனோரா பங்கேற்க உள்ளார்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரேசில் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சோனராவை சந்தித்து பேசினார். அப்போது பயங்கரவாதம், இரு தரப்பு உறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இரு தலைவர்களும், இரு தரப்பு உறவு குறித்து நடத்திய ஆலோசனை பயனுள்ளதாக இருந்தது. 2020 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும் என பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனை அவரும் ஏற்று கொண்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE