திருச்சி: திருச்சி அருகே, புரோக்கரை எரித்துக் கொன்ற, சகோதரர்கள் உட்பட, நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, சிறுகனுார் அருகே, தச்சங்குறிச்சி வனப்பகுதியில், நேற்று முன்தினம் காலை, முழுதும் எரிந்த நிலையில், கார் ஒன்று நின்றது. காருக்குள், எரிந்த நிலையில் சடலம் கிடந்தது.சிறுகனுார் போலீசார் விசாரணையில், சடலமாக கிடந்தவர், திருச்சி, காட்டூரைச் சேர்ந்த, கார் புரோக்கர், ஜாகீர் உசேன், 54, என்பது தெரிய வந்தது.பெரம்பலுார், செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த சரவணன், 23, என்பவருக்கும், ஜாகீர் உசேனுக்கும் இடையே, கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக, முன் விரோதம் இருந்துள்ளது.கடந்த, 12ம் தேதி, கடலுார், ராமநத்தத்தில் உள்ள சரவணனுக்கு சொந்தமான விடுதிக்கு, ஜாகீர் உசேன் சென்றார். அவரை, சரவணனும், அவரது நண்பர்களும் அடித்து கொலை செய்தனர்.பின், அவரது காரில் வைத்து, சிறுகனுார் அருகே வனப்பகுதியில் எரித்து விட்டனர். இதையடுத்து, கொலை வழக்கில், சரவணன், அவரது அண்ணன் மணிகண்டன், 26, மற்றும் நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE