சென்னை: இசை அரசி என்று எல்லாராலும் பெருமையாக அழைக்கப்படும், பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா தன், 85 வது பிறந்த நாளை, நேற்று முன்தினம், ரசிகர்களுடன், 'கேக்' வெட்டி கொண்டாடினார்.
சென்னையில் நடந்த இந்த விழாவை, 'தினமலர்' நாளிதழ் முன்னெடுத்து, அவரது ரசிகர்களுடன் கொண்டாடியது. விழாவில், மதுரை, 'தினமலர்' வெளியீட்டாளர் முனைவர். எல்.ராமசுப்பு, கோவை, 'தினமலர்' வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் ஆகியோர், பி.சுசீலாவிற்கு பரிசு கொடுத்து, பாராட்டி கவுரவித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து சுசீலாவின் ரசிகர்கள், அவருக்கு மலர் கொத்து கொடுத்து மகிழ்ந்தனர். கூடவே தங்களுக்கு சுசீலாவின் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கங்களை குறித்து, உணர்வு பூர்வமாக பேசினர்.விழாவில், ஆடிட்டர் ருத்ரகுமார், கண்ணதாசன் பதிப்பகம் காந்தி கண்ணதாசன், மதுரா டிராவல்ஸ் பாலன், நடிகை சத்யபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். லஷ்மன் சுருதி அமைப்பாளர் லஷ்மன், தொகுத்து வழங்கினார்.நிகழ்ச்சியை முன்னிட்டு சுசீலா பற்றிய குறும் படம் திரையிடப்பட்டது; புகைப்பட கண்காட்சியும் நடத்தப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement