மும்பை : ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சி பிரதிநிதிகளை சந்திக்க இன்று மாலை 4.30 மணிக்கு அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி நேரம் ஒதுக்கி இருந்தார்.
இதனால் மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பை ஒத்திவைப்பதாக கவர்னர் மாளிகை கடைசி நேரத்தில் அறிவித்தது. தேர்தல் செலவுகளை ஒப்படைப்பதற்கு இன்று கடைசி நாள் என்பதால், பல தலைவர்கள் கணக்கை ஒப்படைக்க வேண்டி இருந்ததால் இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சந்திப்பிற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE