ஸ்ரீவில்லிபுத்துார் : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் ஸ்ரீவில்லிபுத்துார் கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணி முதல் ஸ்ரீவில்லிபுத்துார், மம்சாபுரம், கிருஷ்ணன்கோயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்தமழை, அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது. இதில் மம்சாபுரம் வாழைகுளம் கண்மாயிலிருந்து வெளியேறிய தண்ணீர், ஸ்ரீவில்லிபுத்துார் பெரியகுளம் கண்மாய்க்கு வந்ததால், நேற்று காலை, கண்மாயின் வெட்டுகிடங்குகள் மூழ்கி, கடல்போல் தண்ணீர் பரவியிருந்தது. இதனை பொதுமக்கள் பார்த்து வியப்படைந்தனர்.மேற்கு பகுதிகளிலுள்ள கண்மாய்களுக்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதில் ஓடையில் தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால், மொட்டபெத்தான் கண்மாய் நிரம்பும் நிலையை எட்டி கொண்டிருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி ஸ்ரீவில்லிபுத்துாரில் 31 மி.மீ மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யும் மழையால் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இருப்பது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE