கொலை வழக்கில் சிக்கியவர்கள் உட்பட ரவுடிகள், 10 பேரை, குண்டர் தடுப்பு சட்டத்தில், போலீசார் கைது செய்துள்ளனர்.
குன்றத்துார் அடுத்த, நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன், 28. இவரது கூட்டாளி, கிருஷ்ணகுமார், 44. குன்றத்துார், காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் மோகன், 27. இவர்கள் மீது கொலை வழக்கு உள்ளது.அதேபோல, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த, மகேஷ், 23, மீது, விபசார வழக்கு உள்ளது.பல்லாவரம், ஷைன்ஷாலி, 24, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, செந்தில்குமார், 27, பல்லாவரம், பிரேம் குமார், 24, ஆகியோர் மீது, சங்கர் நகர் காவல் நிலையத்தில், வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன.கண்ணகி நகர், மஞ்சுளா, 42, காமராஜ், 30, விக்டர், 38, ஆகியோர் மீது, கஞ்சா வழக்குகள் உள்ளன. ரவுடிகளான இவர்கள், 10 பேரும், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்படி, போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தில், அனைவரையும் கைது செய்துள்ளனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE