ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாலை ஒன்றில் இளம்பெண் ஒருவர் குடிபோதையில் விழுந்து கிடந்தார். பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய பெண் போலீசார் அந்த பெண்ணை பாதுகாப்புக்காக காவல் நிலையத்திற்கு துாக்கி வந்து படுக்க வைத்திருந்தனர்.
போதை தெளிந்த பின் எழுந்து அந்த பெண் என்னை எதற்காக காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்று கேட்டு அங்கு பணியில் இருந்த பெண் எஸ்ஐ, பெண் கான்ஸ்டபிள்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி தப்பி ஓட முயன்றார். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பான காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE