வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இந்தூர்: தாய், சகோதரி, சகோதரன் மனைவி ஆகியோரை போதையில் பலாத்காரம் செய்த இளைஞரை குடும்பமே சேர்ந்து கொலை செய்துள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலம், டாட்டியா பகுதியை சேர்ந்த சுஷில் ஜாதவ் (வயது 24) என்ற இளைஞர் கோபால்தாஸ் மலைப்பகுதியில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவரை மீட்ட போலீசார் அவரது குடும்பத்தார்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

குடும்பத்தினர் அளித்த வாக்குமூலம்: போதைக்கு அடிமையான சுஷில் ஜாதவ், எப்போதும் குடித்துவிட்டு தான் வீட்டிற்கு வருவார். அப்படி வரும் சுஷில், தாய், சகோதரி, சகோதரனின் மனைவி ஆகியோரை பலாத்காரம் செய்துள்ளார். இது பல நாட்கள் நீடித்து வந்ததால் ஆத்திரம் அடைந்து, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம்.

நவ.,11ம் தேதி போதையில் சகோதரனின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்றபோது அனைவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தோம். உடலை மலைப்பகுதியில் போட்டுவிட்டோம். இவ்வாறு வாக்குமூலம் அளித்தனர். இதன் அடிப்படையில் குடும்பத்தினர் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE