புதுடில்லி: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ராஜ்யசபாவில், 'மார்ஷல்'களுக்கான சீருடை மாற்றம் திரும்ப பெறப்பட்டதாக தகவல் வெளியானது.
ராஜ்யசபாவில் பணியாற்றும், 'மார்ஷல்' எனப்படும், சபை காவலர்களுக்கான சீரூடை மாற்றப்பட்டுள்ளது. இதுவரை, மார்ஷல்கள், முழு நீள கோர்ட் மற்றும் தலைப்பாகை அணிந்திருந்தனர். தற்போது ராணுவத்தினர் போன்ற சீருடை மற்றும் தொப்பி வழங்கப்பட்டு சீருடை மாற்றப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். எதிர் கட்சிகளின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என ராஜ்யசபா துணை தலைவர் வெங்கையா தெரிவித்தார்.இந்நிலையில் மார்ஷல்களுக்கான ராணுவம் போன்ற சீருடை திடீரென திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு மீண்டும் முந்தைய சீருடையுடன் காவலர்கள் பணிக்கு வந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE