பொங்கலுார்: கட்டி முடிக்கப்பட்டு, ஆறு மாதங்களாகியும், கால்நடை மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரவில்லை.பொங்கலுார் அருகே கழுவேறிபாளையத்தில் சிறிய அளவில் கால்நடை கிளை நிலையம் செயல்பட்டு வந்தது. அப்பகுதியில் கால்நடை மருத்துவமனை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் பொங்கலுார் முத்துாரில் கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.நபார்டு வங்கி நிதி உதவியின் கீழ், 31.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மருத்துவமனையில் தண்ணீர் வசதிக்காக தனியாக போர்வெல் அமைத்து மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு, சுற்றிலும் பாதுகாப்புக்காக கம்பி வேலி போடப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.இந்த மருத்துவமனை வேலை முடிந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை திறப்பு விழா நடத்தப்படவில்லை. இதனால், அப்பகுதி விவசாயிகள் கேத்தனுார் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இதனால் தேவையற்ற கால விரயம் ஏற்படுகிறது. இந்த மருத்துவமனையை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE