திருப்பூர்: திருப்பூர், மாவட்ட காங்., அலுவலகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதற்கு, மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நேற்று மாலை வரை, 30 பேர் மனு அளித்தனர். காங்கயம், அவிநாசி, பல்லடம் நகராட்சி மற்றும் பேரூராட்சி பதவிக்கு பார்க் ரோடு ஐ.என்.டி.யு.சி., அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டது. வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார். நேற்று மாலை வரை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில், பல பதவிகளில் போட்டியிட, பலர் மனு அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE