பாகூர்: மைனர் பெண்திருமணம் தொடர்பாக, கணவன், தாய் மற்றும் தாத்தா மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி எல்லை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணின், மொபைல் போனிற்கு கடந்த ஆண்டு வந்த ராங் கால் மூலமாக திண்டுக்கல்லை சேர்ந்த சின்னையன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.பெண் வீட்டாரின் ஒத்துழைப்புடன்,கடந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டில் உள்ள ஒரு கோவிலில், சின்னையனுக்கும், அந்த பெண்ணிற்கும் திருமணம் நடந்தது.இந்நிலையில், பிரசவத்திற்காக கடந்த மாதம் புதுச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்த அந்த பெண், ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு கடந்த மாதம் 24ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அப்போது, அந்த பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியடையாமல் இருப்பது டாக்டர்களுக்கு தெரிய வந்தது.இது குறித்து தகவலறிந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர்,அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தி, இது குறித்து வழக்குபதிவு செய்திட போலீசாருக்கு பரிந்துரை செய்தனர்.அதன் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார், சிறுமியின் கணவர் சின்னையன், தாய் சாந்திமற்றும் தாத்தா ஆகியோர் மீது குழந்தை திருமணம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ்,வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.