காரைக்கால்: காரைக்காலில் அரசு பள்ளிகளில் சூடான பாலுடன் சத்துமாவு கலந்து வழங்கும் திட்டத்தை கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் துவக்கி வைத்தார்.பள்ளி கல்வித்துறையின் கீழ், அரசு பள்ளிகளில் ராஜிவ்காந்தி காலை சிற்றுண்டி திட்டத்தில் மாணவர்களுக்கு சூடான பால் வழங்கப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக மாணவர்களின் சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், சூடான பாலில் சத்துமாவு வழங்கும் திட்டம் வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் செயல்படுத்தப்படுகிறது. சாக்லேட் மற்றும் பாதாம் சுவைகளில் ஒரு மாணவர்களுக்கு 7 கிராம் என்ற அளவில் சத்துமாவு சூடான பாலில் கலந்து வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை காரைக்கால் பெரியபேட் அரசு தொடக்கப்பள்ளியில், கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் துவக்கி வைத்தார்.சப் கலெக்டர் ஆதாஷ்,முதன்மை கல்வி அதிகாரி அல்லி. துணை இயக்குனர் கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.