திருப்பூர் : டூவீலரில் செல்லும் போது 'ேஹண்ட் பேக்'கை தவற விட்டு சென்ற பெண்ணிடம், போலீசார் பேக்கை ஒப்படைத்தனர்.திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி போலீஸ் ஸ்டேஷனில், போலீசாக பணியாற்றுபவர் விஜயகுமார்.
இவர், ராக்கியாபாளையம் பகுதியில், நேற்று முன்தினம் மாலை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ரோட் டோரம் 'ேஹண்ட்பேக்' ஒன்று கிடந்தது. பொதுமக்களும் திரண்டிருந்தனர்.இதனால், 'பேக்'கை கைப்பற்றிய, விஜயகுமார், அதில் சோதனையிட்டார். அதில், 2,500 ரூபாய் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தது. அருகிலிருந்து அம்மாபாளையம், 'செக்போஸ்ட்டு'க்கு எடுத்து சென்று வைத்திருந்தார்.அப்போது, மொபைல் போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், தன் பெயர் சுகன்யா எனவும், டூ வீலரில் செல்கையில், 'ேஹண்ட் பேக்' தவறி விழுந்து விட்டதாகவும் கூறினார்.
இது குறித்து, உயரதிகாரிகளுக்கு தெரிவித்த விஜயகுமார், அவர்களின் அறிவுரைப்படி அதனை, அப்பெண்ணிடம் ஒப்படைத்தார். இதையறிந்த பொதுமக்கள், போலீஸ்காரர் விஜயகுமாரை பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE