இந்த செய்தியை கேட்க
சென்னை: கார் விபத்தில் உயிரிழந்தவர்களில் 78 சதவீதம் பேர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளன.
சாலை விபத்து குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் கடந்த ஆண்டு 24,671 பேர் கார் விபத்தில் சிக்கியுள்ளனர். அதில், 22,603 பேர் காயத்துடன் தப்பியதாகவும், 12,548 பேர் சீட் பெல்ட் அணிந்ததாகவும், தெரியவந்துள்ளன. உயிரிழந்த 2,068 பேரில், 1,614 பேர் (78 சதவீதம்) சீட் பெல்ட் அணியாததால் பலியாகியுள்ளனர்.

கடந்தாண்டு மட்டும் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக சுமார் 11.7 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழக மக்களிடையே சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு அதிகளவில் ஏற்படாததே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாகக் கூறப்படுகிறது. காரில் பயணிக்கும் மூன்றில் ஒரு குழந்தை சீட் பெல்ட் இல்லாமல் பயணிப்பதாகவும், அதற்கான பிரத்யேக இருக்கைகளை ஏற்படுத்துவதில்லை என்பதும் தெரியவந்துள்ளன.