உத்திரமேரூர்:'களியாம்பூண்டி - பெருநகர் சாலை வளைவில், சேதமடைந்துள்ள சாலை தடுப்பை சீரமைக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டி - பெருநகர் சாலையில், களியாம்பூண்டி மின்வாரிய அலுவலகம் அருகில், அபாயகரமான சாலை வளைவு உள்ளது.வளைவின் ஓரம் பள்ளம் இருப்பதால், நெடுஞ்சாலைத்துறை சார்பில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக, சாலை தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.சமீபத்தில், அவ்வழியே சென்ற வாகனம் மோதியதில், சாலை தடுப்பு சேதமடைந்துள்ளது. இதனால், இரவு நேரத்தில், இந்த சாலையில் வேகமாக வரும் வாகனங்கள், வளைவில் திரும்பும்போது, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.எனவே, சேதமடைந்துள்ள சாலை தடுப்பை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE