இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் மீதான தேச துரோக வழக்கில், நியாயமான வாதங்களை முன் வைக்க, அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என, இஸ்லாமபாத் உயர் நீதிமன்றம், சமீபத்தில் உத்தரவிட்டது. அதுவரை, சிறப்பு நீதிமன்றம், இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப், அடுத்த மாதம், 5க்குள், தனது வாக்குமூலத்தை அளிக்க அவகாசம் அளித்து, சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE