நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில், ரூ. 2 லட்சம் மதிப்பில் வாங்கிய பேட்டரியால் இயங்கும் வாகனம் தரமில்லாததால் உடைந்து சேதமானதில் துப்புரவு பணியாளர் காயமடைந்தார்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் குப்பை அள்ளும் பணிக்காக, ரூ.16 லட்சம் மதிப்பில், ஆறு மாதங்களுக்கு முன், பேட்டரியால் இயங்கும் 8, மூன்று சக்கர வாகனங்கள் வாங்கப்பட்டன. நகராட்சியில் எந்த பொருள் வாங்க வேண்டுமென்றாலும் நேரடியாக டெண்டர் விட்டு வாங்குவதே வழக்கம்.ஆனால், குப்பை அள்ளும் பேட்டரி வண்டிகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, சென்னையில் இருந்து நேரடியாக மக்கள் பிரதிநிதிகள் மூலம் வழங்கப்பட்டது. இதன் தரம் குறைவாக இருந்தது. வாங்கிய சில மாதங்களிலேயே இரண்டு வண்டிகள் பழுதாகின. வண்டிகளை வினியோகம் செய்த நிறுவனங்களிடம் கூறினாலும், மேலிடத்தில் இருந்து வழங்கியதால், அதுபற்றி கண்டு கொள்வதில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் துப்புரவு பணியாளர் சிவபிரகாசம் எடுத்து சென்ற வண்டி வைடிபாக்கம் அருகே திடீரென உடைந்தது விழுந்தது. இதில் சிவபிரகாசம் காயமடைந்தார். வாங்கிய ஆறு மாதத்திலேயே பேட்டரி வண்டிகள் பழுதடைவது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE