அவிநாசி,:மாவட்ட அளவிலான ஜூடோ போட்டியில், கருவலுார் அரசுப்பள்ளி மாணவியர், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.பள்ளிக்கல்வி துறை சார்பில், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி, திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில், டேக்வாண்டோ விளையாட்டில், அவிநாசி அருகேயுள்ள, கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.இதன் மூலம், இவர்கள் துாத்துக்குடியில் நடத்தப்பட உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவியரையும், பயிற்சி வழங்கிய உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜ் ஆகியோரை, பள்ளி தலைமையாசிரியை மல்லிகா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE