ராமேஸ்வரம்: பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து பெரிய ரக நாட்டு படகில் மீன் பிடிக்க செல்வதற்கு நேற்று மீனவர் ரோஸ்டன் 23, என்பவர் கரையில் இருந்த சிறிய ரக நாட்டு படகில் ஏறி சென்றார். அப்போது கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால் நிலை தடுமாறிய மீனவர் கடலில் தவறி விழுந்தார். உடனிருந்த மற்ற மீனவர்களும் கடலில் விழுந்த மீனவரை தேடியும் கிடைக்காததால், அவர் உயிரிழந்திருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மண்டபம் மரைன் எஸ்.ஐ., கணேசமூர்த்தி வழக்கு பதிந்து மீனவர் உடலை தேடி வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE