மதுரை: 'மதுரையிலிருந்து கோவை, பெங்களூ ருவுக்கு பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க வேண்டும்,' என, தென்னக ரயில்வே பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்க பொது செயலாளர் பத்மநாபன் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸிடம் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது: மீட்டர் கேஜ் பாதைகளை அகல ரயில் பாதையாக மாற்ற ஏற்கனவே பகலில் மதுரை-கோவை இடையே இயங்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டன. அகல பாதை பணிகள் முடிந்து ஓராண்டிற்கு மேலாகியும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படவில்லை. பெங்களூருவில் ஏராளமான தென் மாவட்டத்தினர் வேலை செய்கின்றனர். எனவே கோவை, பெங்களூருவுக்கு பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE