ஆத்தூர்: தாலுகா அலுவலக வளாக தொட்டிகளில், மூன்று மாதத்துக்கு பின் குடிநீர் நிரப்பப்பட்டது.
ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில், தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், சார்பதிவாளர், சார்நிலை கருவூலம், மாவட்ட சிறை, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள் உள்ளன. அங்கு, கடந்த, ஆக., 20ல், முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. அதில், முதல்வர் பழனிசாமி, மக்களிடம் மனுக்கள் பெற்றார். அப்போது, தாலுகா அலுவலக வளாகத்தில், நகராட்சி சார்பில், இரு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால், விழாவுக்கு பின், குடிநீர் வழங்கப்படாததால், மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால், மூன்று மாதத்துக்கு பின், நேற்று முன்தினம், நகராட்சி தண்ணீர் லாரி மூலம், இரு தொட்டிகளிலும் குடிநீர் நிரப்பப்பட்டது. மக்கள் கூறுகையில், 'தாலுகா அலுவலகத்துக்கு, தினமும் ஏராளமானோர் வந்து செல்வதால், இரு தொட்டிகளிலும், முறையாக குடிநீர் வினியோகிக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE