ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த போடூர் பள்ளத்தில் இரண்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவை, இரவில் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று, விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவும் இரண்டு யானைகளும் ராமாபுரம், சப்படி வழியாக ஒமேதப்பள்ளி கிராமத்துக்கு வந்தன. அங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த பீன்ஸ், தக்காளியை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. இது குறித்து ராயக்கோட்டை வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் அளித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து, யானைகளை பட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டை அடித்தும் துரத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் இரண்டு யானைகளில் ஒரு யானை, மீண்டும் போடூர் பள்ளம் வனப்பகுதிக்கு திரும்பியது. மற்றொரு யானை, ஒமேதப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையை வழியாக, ஜெட்டிப்பள்ளி வனப்பகுதிக்கு சென்றது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE