ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த, பொத்தனூர் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. கடந்த சில நாட்களாக பருவநிலை மாறுபாடு காரணமாக பல்வேறு பகுதிகளில் மக்கள் சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவதியுற்று வருகின்றனர். மேலும் சுகாதாரப்பணி நடந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து வார்டுகளிலும் வீடுகள் தோறும் சுற்றுப்புறம் தூய்மையாக உள்ளனவா என, பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினருடன் தூய்மைப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு உருவாகும் சூழல் இருந்தால், தண்ணீரை அகற்றி, அபேட் மருந்து ஊற்றுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE