ஈரோடு: ஈரோடு, பெருந்துறை சாலையில் உள்ள, த.மா.கா., அலுவலகத்தில் மத்திய மாவட்ட, த.மா.கா., சார்பில், உள்ளாட்சி தேர்தலுக்காக விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், இளைஞரணி தலைவர் யுவராஜா, துணை பொதுச் செயலாளர் பிரகாஷ் ஜெயின், செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், மண்டல பொறுப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றனர். ஈரோடு மாநகராட்சி உட்பட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்காக, விருப்ப மனுவை தாக்கல் செய்தனர். தேர்தல் அறிவிப்புக்குப்பின், விருப்ப மனு வழங்கியவர்களில், ஒதுக்கீடு பெறுபவர்கள் விபரம் தெரிவிக்கப்படும் என்றனர்.வட்டார தலைவர்கள் ரகுபதி, புவனேஸ்வரன், மண்டல தலைவர் மணியன், கண்ணன், சதாம், மோகனாம்பாள், அஜித் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE