தேனி, 'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் தந்தை டேவிசிற்கு, தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு, தனியார் மருத்துவக்கல்லுாரிகளில் சேர்ந்த வழக்கில் ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என பத்து பேரை தேனி சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியது. மாணவர் உதித்சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசனுக்கு நவ., 26, மாணவர் பிரவினின் தந்தை சரவணனுக்கு நவ., 29ல் தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.இந்நிலையில் மாணவர் ராகுல் தந்தை டேவிஸ் சார்பில், தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று அவருக்கு ஜாமின் வழங்கி, மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.