விழுப்புரம் : விழுப்புரத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் நாராயணா நகர் பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இந்த பன்றிகள் அங்குள்ள குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கிய பகுதிகளை கிளறும் நிலை நீடித்து வருகின்றது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது.எனவே, நாராயணா நகரில் சுற்றித்திரியும் பன்றிகளை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE