கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வயிற்று வலியால் அவதியடைந்த பெண் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி மிளகாய்தோட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் மனைவி பூங்கொடி,35; இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது.இதனால் மனமுடைந்த அவர், கடந்த 25 ம் தேதி எலிபேஸ்ட் சாப்பிட்டுள்ளார். உடன், அவரை தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.