பாகூர் : படகு கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த மீனவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார், 45; மீனவர். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலருடன் பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது, அலையின் சீற்றத்தால் படகு நிலை தடுமாறி கவிழ்ந்துள்ளது. இதில், படகு எஞ்சினின் துடுப்பு பகுதியில் சிக்கிய ஜெயக்குமார் படுகாயமடைந்தார். உடனே, சக மீனவர்கள் அவரை மீட்டு பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.