புதுச்சேரி : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சூடான பாலுடன், சத்துமாவு கலந்து வழங்கும் திட்டத்தை சேந்தநத்தம் அரசு தொடக்கப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் நேற்று துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ராஜிவ்காந்தி காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் 100 மில்லி சூடான பால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவ -மாணவிகளின் சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் சூடான பாலுடன், ஸ்ரீ சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளை சார்பில், நுண் ஊட்டச்சத்து உள்ள சாயி சூர்ண் (புரதச் சத்து மாவு ) தலா 7 கிராம் கலந்து வழங்கும் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது.சேந்தநத்தம் அரசு தொடக்கப் பள்ளியில் இத்திட்டத்தை முதன்மை கல்வி அலுவலர் மீனாட்சி சுந்தரம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பாண்லே நிறுவன மேலாண் இயக்குநர் சாரங்கபாணி, ஐந்தாம் வட்டப் பள்ளித் துணை ஆய்வா ளர் ராபர்ட் கென்னடி, மதிய உணவு திட்டப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE