பல்லடம்:கண்காணிப்பை தீவிரப்படுத்தி, குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்லடத்தில் ஆய்வு மேற்கொண்ட ஐ.ஜி., அறிவுறுத்தினார்.பல்லடம் உட்கோட்டத்தின் கீழ், பல்லடம், மங்கலம், காமநாயக்கன்பாளையம், அவினாசிபாளையம், மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்டவை செயல்படுகிறது. ஸ்டேஷன்களில், மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா, ஆய்வு மேற்கொண்டார்.மாவட்ட எஸ்.பி., திஷா மிட்டல், பல்லடம் டி.எஸ்.பி., முருகவேல், மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர். நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகளை விரைந்து முடிக்க வேண்டும். கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி, குற்ற சம்பவங்களை குறைக்கவும், விபத்துகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஐ.ஜி., அறிவுறுத்தினார்.வழக்குகள் சம்மந்தப்பட்ட கோப்புகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பதையும், ஐ.ஜி., ஆய்வு செய்ததாக, போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE