அந்தியூர்: அந்தியூர் அருகே, பிரம்மதேசத்தில், புதுக்கரடியனூர் செல்லும் சாலையில், கனரா வங்கி, ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க, மர்ம ஆசாமிகள் முயன்றுள்ளனர். இயந்திரத்தில் பொருத்தியிருந்த அலாரம் ஒலி எழுப்பவே, ஆசாமிகள் விட்டுச் சென்று விட்டனர். இதனால் லட்சக்கணக்கான பணம் தப்பியது. வங்கி மேலாளர் புகாரின்படி, அந்தியூர் போலீசார், ஆய்வு செய்தனர். 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE