ஆண்டிபட்டி: பருவமழை கைகொடுத்ததால் ஆண்டிபட்டியில் வைகை ஆற்றின் கரையோர விவசாயிகள் வாழை சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.பருவமழையால் நடப்பு ஆண்டில் வைகை ஆற்றில் தொடர்ச்சியான நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. கரையோர நிலங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்பட்டுள்ளது. இதனால் ஆண்டிபட்டியில் ஆற்றின் கரையோர விவசாயிகள் வாழை சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது:நடப்பு ஆண்டில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையால் வைகை ஆற்றில் தொடர்ச்சியாக நீர் வரத்துள்ளது. தற்போதுள்ள நீர் ஆதாரம் நெல், கரும்பு, வாழை சாகுபடிக்கு ஏற்றதாகும். கரும்பு சாகுபடியில் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை சார்ந்து இருக்க வேண்டியது உள்ளது.நெல் சாகுபடி சில மாதங்களில் முடிந்து விடும். வாழைக்கான சாகுபடி 10 மாதங்கள் வரை நீடித்தாலும் விவசாயிகளுக்கு தொடர்ச்சியான வருவாய் கிடைக்கும். வாழை இலை, வாழைக்காய், வாழைப்பழத்தின் தேவை ஆண்டு முழுவதும் உள்ளது. இதனால் வாழை சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பலரும் அதில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர் ,என்றனர். ----
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE