தேவதானப்பட்டி: சபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விபத்தை தவிர்க்க தேவதானப்பட்டி போலீசார் ஒளிரும் குச்சிகளை வழங்கினர்.வட மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சபரிமலைக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் காட் ரோடு, தேவதானப்பட்டி, பெரியகுளம் வழியாக செல்கின்றனர். இரவு நேரங்களில் அவர்கள் விபத்து இல்லாமல் பாதுகாப்புடன் செல்வதற்காக, தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், போலீசார் காட் ரோடு செக்போஸ்ட்டில் வைத்து பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகளை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE