மலுமிச்சம்பட்டி:மலுமிச்சம்பட்டியில் உள்ள நேரு மகா வித்யாலயா கல்லுாரியின், 27வது பட்டமளிப்பு விழா நடந்தது; கல்லுாரி தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.பாரதியார் பல்கலை துணைவேந்தர் காளிராஜ் பேசுகையில், ''பட்டம் பெறுவோர், தங்களுக்கு இவ்வாய்ப்பை கொடுத்த பெற்றோருக்கும், கற்றுத்தந்த ஆசிரியர்களுக்கும் நன்றி கூறுவதே, இந்நாளில் முக்கியமானது. நாம் கற்கும் கல்வி, சமுதாய மேம்பாட்டுக்கு உதவ வேண்டும். எதிர்மறை எண்ணங்களை விடுத்து, நேர்மறை எண்ணங்களோடு வாழ்க்கையை வாழ வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, இளங்கலை மற்றும் முதுநிலைகளில் பல்கலை தர வரிசையில் இடம் பிடித்த, 11 பேர் உட்பட, 621 பேருக்கு பட்டச்சான்றிதழை வழங்கினார். செயலாளர் பரத்குமார்ஜெகமணி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுப்ரமணி ஆண்டறிக்கை வாசித்தார். இணை செயலாளர் மகாவீர் போத்ரா, முன்னாள் தலைவர் பால்சந்த், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE