மதுரை: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதமரின் ஓய்வூதிய திட்டம், சுய தொழில் செய்வோர், சிறு வியாபாரிகளுக்கான தேசிய ஓய்வூதிய திட்டம் விழிப்புணர்வு வார விழா மதுரையில் நடந்தது. கலெக்டர் வினய் தலைமை வகித்தார்.அவர் பேசுகையில், ''இத்திட்டத்தில் 18 முதல் 40 வயதுடைய அனைத்து தொழிலாளர்களும் பதிவு செய்யலாம். தொழிலாளர்கள் செலுத்தும் பங்குத் தொகைக்கு ஈடான தொகை, மத்திய அரசால் செலுத்தப்படும்.60 வயதிற்கு பின் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். பொது சேவை மையங்களில் பதிவு செய்யலாம்,'' என்றார். மதுரை தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மைவிழிசெல்வி பங்கேற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE