காரைக்கால் : புகையிலை பொருட்களை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருநள்ளாறு செல்லுார் அகலங்கண்ணு பகுதியில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருநள்ளார் போலீசார் சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, கடை உரிமையாளர் முகமது நசுருதீன்,40; இவருக்கு புகையிலை பொருட்களை சப்ளை செய்த சங்கர், 38; ஆகியோரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE