ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, கல்லூரி மாணவர் மாயமானார். ஊத்தங்கரை அடுத்த தகரப்பட்டியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன் கவுதம், 17, நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரி பஸ் மூலம் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த, 27 காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற கவுதம், மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், சக்கரவர்த்தி ஊத்தங்கரை போலீசில் அளித்த புகார்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE