சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஈழத்தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை. பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இயலவில்லை என இலங்கை அதிபர் கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இலங்கையில் வாழும் மக்கள் அனைவரையும் சமமாக கருதுகிறேன் என கூறிய இலங்கை அதிபர், பிரதமர் மோடியை சந்தித்த பிறகு இப்படி பேட்டி அளித்தது மிகவும் கவலை அளிக்கிறது.
பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிளவுபடுத்தி பிரித்து பேசுவது அவர் மனதை எது ஆட்கொண்டுள்ளது என்பதற்கான அறிகுறியே தவிர ஜனநாயகத்தை போற்றுவதாகாது. மோடி, உடனடியாக தலையிட்டு, இலங்கையில், தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைத்து, அவர்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் ஸ்டாலின் கூறியுள்ளார்.