கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை ரயில்வே கேட்டை திறக்கக் கோரி, பல கட்ட போராட்டங்களை நடத்துவது என, மக்கள் முடிவு செய்துள்ளனர்.
கரூர், திருச்சி பழைய மெயின் சாலை லாலாப்பேட்டையில் ரயில்வே கேட் உள்ளது. இது, கடந்த சில மாதங்களுக்கு முன் காரணமின்றி மூடப்பட்டது. இதனால், அருகிலுள்ள சுரங்கப்பாதை வழியாக மக்கள் சென்றனர். மழைக் காலத்தில் அதில் தண்ணீர் தேங்குவதால் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்கும் வகையில், லாலாப்பேட்டையை சேர்ந்த மக்கள், சிவன் கோவில் வளாகத்தில் கூட்டம் நடத்தினர். ரயில்வே கேட் மீண்டும் திறக்க வேண்டும். லோக்சபா தேர்தலின்போது அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சுரங்கப்பாதையை விரிவுபடுத்த வேண்டும். நகர பஸ்கள் வந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரங்கப்பாதையில் மழைநீர் அகற்றுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதுவரை மூடப்பட்ட ரயில் கேட் கதவை பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கோரிக்கைகள் நிறைவேற்ற, தேர்தல் புறக்கணிப்பு, கடையடைப்பு, சப் - கலெக்டர் ஆபீஸ் முற்றுகை என பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என, முடிவு எடுக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE