இந்த செய்தியை கேட்க
புதுடில்லி: நாடு முழுவதும் உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், துருக்கியிலிருந்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி குறைவு காரணமாக நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.140 ஐ எட்டியுள்ளது.

இந்நிலையில், மத்திய நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை : மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் துருக்கியில் இருந்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும். டிசம்பர் பிற்பகுதியில் இருந்து ஜனவரி முதல் தேதிகளுக்குள் வெங்காயம் இந்தியா வந்தடையும் கூடுதலாக எகிப்தில் இருந்தும், டிசம்பர் மத்திக்குள் 6090 மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.