பண்ருட்டி:பண்ருட்டி ரயில் நிலையத்தில் கஞ்சா விற்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டியில் கஞ்சா விற்பனை நடந்து வருவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ரயில் நிலையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு சந்தேகபடும்படி நடமாடிய வாலிபரை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் அவர் அம்பேத்கர் நகரை சேர்ந்த கண்ணன்,32; என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர்.இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து கண்ணனை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE