உடுமலை:உடுமலை உழவர் சந்தை எதிரில் கிளை நூலகம் எண்- 2 உள்ளது. இங்கு உலக எய்ட்ஸ் தினம் உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு உடுமலை அரசு மருத்துவமனை மனநல ஆலோசகர் மணிகண்டராஜ் தலைமை வகித்து எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதி மொழி வாசித்தார். நூலக வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். பால்வினை நோய் மற்றும் காசநோய் தடுப்பு குறித்து விளக்கமளிக்கப்பட்டது. போட்டித்தேர்வு பயிற்சி ஆசிரியர் ஜெய்கணேஷ், நூலக வாசகர் வட்ட துணைத்தலைவர் சிவக்குமார், நூலகர்கள் கணேசன், மகேந்திரன், அருள்மொழி மற்றும் வாசகர்கள் பங்கேற்றனர்.