உடுமலை:அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால், அணை நீர் மட்டம், ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது.உடுமலை அருகேயுள்ள, அமராவதி அணைக்கு, கடந்த வாரம், வினாடிக்கு, 250 முதல் 300 கன அடி நீர் வரத்து மட்டுமே இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, மூணாறு, மறையூர் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக, அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.இதனால், அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. நேற்றுமுன்தினம், அணை நீர்மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில், 63.65 அடியாக இருந்தது. நேற்று காலை, அணை நீர்மட்டம், 64.47 அடியாக உயர்ந்தது. அணை நீர்இருப்பு, 2,081.17 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு வினாடிக்கு, 818 கன அடி நீர் வரத்தும் இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE