திண்டிவனம்:ரெட்டணை கென்னடி மெட்ரிக் கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆசிரியர்களுக்கு திறனாக்க பயிற்சி நடந்தது.பயிற்சி வகுப்பை கென்னடி கல்விக்குழும தாளாளர் சண்முகம் துவக்கி வைத்தார். பள்ளி செயலர் சந்தோஷ் முன்னிலை வகித்தார். திறனாக்க பயிற்சி பயிற்றுநர் டேவிட், இந்த கால கல்வி முறைக்கு ஏற்ப மாணவர்களுக்கு எப்படி கல்வி கற்க வேண்டும் என்பதை திறனாக்க பயிற்சி மூலம் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார்.பள்ளி நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன் சண்முகம் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE